"சோசியல் மீடியா-ல பார்க்குறது எல்லாத்தையும் நம்பாதீங்க".. விராட் கோலி குறித்த கேள்வி.. ரோஹித் கொடுத்த 'நச்' பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தததாக பரவிய தகவல்களை மறுத்திருக்கிறார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பிக்பாஸ் விக்ரமனின் பரபரப்பு Post .. வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை கொண்டு வருவதில் இவ்வளவு இருக்கா?".. கௌசர் பாய்க் EXCLUSIVE பேட்டி!

கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.

அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டிடிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி.

Images are subject to © copyright to their respective owners.

அனல் பறந்த பேட்டிங்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது. அந்த அணியின் கவாஜா 180 ரன்களை குவித்திருந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் பேட்டிங்கில் மிரட்டியது என்றே சொல்ல வேண்டும். கில் 118 ரன்கள் எடுக்க, கோலி 186 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 571 எடுத்திருந்தது. இதனையடுத்து 91 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணியை சேஸ் செய்தது ஆஸ்திரேலிய அணி. இருப்பினும் கடைசி நாளில் அந்த அணி 175 ரன்கள் எடுக்க மேட்ச் டிரா ஆனது.

Images are subject to © copyright to their respective owners.

ரோஹித் பேட்டி

இந்நிலையில், போட்டி முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் ஷர்மா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக வெளியான தகவல்கள் பற்றி கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்த ரோஹித்,"சமூக ஊடகங்களில் நீங்கள் பார்ப்பதை நம்ப வேண்டாம்.

Images are subject to © copyright to their respective owners.

விராட் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்று நினைக்க வேண்டாம், அவருக்கு கொஞ்சம் இருமல் இருந்தது. அவ்வளவு தான். அவர் ஓடுவதை பார்க்கும்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாதது போல தெரியவில்லை. நல்ல வெயில் இருந்தபோதிலும் அவர் சிறப்பாக விளையாடினார். அக்சர் படேலுடன் இணைந்து அவர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்" என்றார்.

முன்னதாக விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,"உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் உங்களுடைய  ஆட்டம்  என்னை ஊக்குவிக்கிறது" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "அவங்கள கிரவுண்ட்-ல இருந்து விரட்டுங்க".. சீண்டிய ரசிகர்கள்.. ரஹானே எடுத்த துணிச்சலான முடிவு.. மவுனம் கலைத்த சிராஜ்..!

CRICKET, ROHIT SHARMA, VIRAT KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்