VIDEO: ‘இப்டி மாட்டிகிட்டயே பங்கு’!.. சைலண்டா பின்னாடி மறைஞ்சு ‘ரோஹித்’ என்ன பண்றாரு பாருங்க.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2-வது டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 46 ரன்களும், கேப்டன் மோர்கன் 28 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 17.5 ஓவர்களில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தொடக்க வீரராக அறிமுகமான இஷான் கிஷன் 32 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். இது ரோஹித் ஷர்மாவின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் மைதானத்தில் சப்போர்ட் ஸ்டாப்களுடன் அமர்ந்து வீரர்களை ரோஹித் ஷர்மா உற்சாகப்படுத்தினார்.

அப்போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பின்னால் அமர்ந்திருந்த ரோஹித் ஷர்மா, போட்டியை பார்த்துக் கொண்டே யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து ஏதோ சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். இவை அனைத்தும் அப்படியே கேமராவில் பதிவாகின. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்