VIDEO: ஐயோ, என்ன 'இப்படி' பண்ணிட்டாரு...! 'ஒரு சுற்று சுற்றி கீழே விழுந்த தினேஷ் கார்த்திக்...' ஒரு நிமிஷம் அப்படியே 'உறைஞ்சு' நின்ன வருண்...! என்ன நடந்தது...? - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 14-வது சீசன் தொடர் அபுதாபியில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் கொல்கத்தா அணி மற்றும் டெல்லி அணி இன்று (28-09-2021) மோதின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் டெல்லி அணி களத்தில் இறங்கியது.

முதலில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷிகர் தவான் முதலில் அதிரடியாக ஆடினாலும், தவறான ஷாட்டால் வெறும் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசி 24 ரன்களுக்கு அவுட்டானார்.

அதனை தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னுடனும், ஹெட்மெயர் 4 ரன்னுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 9 ரன்னுடனும் , ஆவேஷ் ஐயர் 5 ரன்னுடனும், லலித் யாதவ் மற்றும்  அக்‌ஷர் படேல் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து அனைவரும் அவுட்டாகி வெளியேறினர்.

இதில், கேப்டன் ரிஷப் பண்ட் மட்டுமே இரண்டு இலக்க ரன் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.

அதோடு, டெல்லி அணி பேட்டிங்கின் போது, ஆட்டத்தின் 17-வது ஓவரின் போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்துக் கொண்டிருக்க, வருண் சக்கரவர்த்தி பந்து வீசினார். வருண் சக்கரவர்த்தி கீழாக போட்ட ஒரு பந்தை ஓங்கி அடிக்க முயன்ற ரிஷப் பண்ட், பந்தை தொடக்கூட முடியாமல் தவறவிட்டார்.

அப்போது தான் பந்தை தவறவிட்ட நிலையில் பந்தை மீண்டும் அடிப்பதாக விளையாட்டுத் தனமாக பேட்டை சுழற்ற, அது பின்னால் நின்றுக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கின் ஹெல்மட்டை பதம் பார்த்திருக்கும். ஆனால், நூலிழையில் தினேஷ் கார்த்திக் தப்பினார் என்றே சொல்ல வேண்டும்.

இதைக் கண்ட வருண் சக்கரவர்த்தி ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துப்போய் நின்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்