காயத்தால் விலகிய 'ஷ்ரேயாஸ் ஐயர்'... "எங்களோட அடுத்த 'கேப்டன்' இவரு தான்!.." தரமான 'அப்டேட்' கொடுத்த 'டெல்லி கேப்பிடல்ஸ்'... "போடுறா வெடிய!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிரான அனைத்து தொடரையும், இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில், அடுத்ததாக ஐபிஎல் தொடரில் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று, ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்கள், ஏற்கனவே பயிற்சியை ஆரம்பித்து விட்டனர். இந்த சீசனுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களது அணியுடன் வரிசையாக இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer), இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியின் போது, காயமடைந்தார். அவரது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து முழுமையாக அவர் குணமடைய, 4 - 5 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்பட்டது. இதற்காக, விரைவில் அவர் அறுவை சிகிட்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதன் காரணமாக, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட அவரால் பங்கேற்க முடியாமல் வெளியேறினார். இதனையடுத்து, டெல்லி அணியின் அடுத்த கேப்டன் யாராக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.


அந்த அணியில், ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, அஸ்வின் உள்ளிட்டவர்களின் யாராவது கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் எனவும் கருதினர். மேலும், இளம் வீரர் ரிஷப் பண்ட் பெயரும் அடிபட்டது.

 

இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணி வெளியிட்டுள்ளது. அந்த அணியின் புதிய கேப்டனாக, இளம் வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) தேர்வாகியுள்ளார் என்றும், இந்த சீசனில், டெல்லி அணியை அவர் தான் வழி நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், வேற லெவல் ஃபார்மில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்