"விரும்பும் அனைத்தையும் பிரகாசமாக்கட்டும்".. ரிஷப் பண்ட்-ன் நெகிழ்ச்சி போஸ்ட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "25 வருஷமா சம்பளம் இல்லாம வேலை பார்த்திருக்கேன்".. கணவன் மீது வழக்கு தொடர்ந்த மனைவி.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!

ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

விபத்து

இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே, தன்னால் பல்துலக்க முடிவதாகவும் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும் பண்ட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

ஹோலி பண்டிகை

இந்தியாவே ஒரு பண்டிகை தேசம் என வெளிநாட்டினர் பலமுறை குறிப்பிடுவது உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர் நம் மக்கள். அந்த வகையில் இன்று ஹோலி பண்டிகை என்பதால் இந்தியாவே களைகட்டி இருக்கிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும் வர்ணங்கள் கலந்த நீரை ஒருவர்மீது ஒருவர் ஊற்றியும் இந்த விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் மக்கள். குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் பண்டிகை பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

வாழ்த்து

இந்நிலையில், ரசிகர்களுக்கு ரிஷப் பண்ட் ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். ஹோலியின் வண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் மற்றும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் பிரகாசமாக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன், ஹோலி பண்டிகையின் போது எடுக்கப்பட்ட தனது பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் அந்தப் பதிவில் ரிஷப் மீண்டு வர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "தல தோனி கேப்டன்சி.. ".. CSK வீரர் அஜிங்கியா ரஹானே உருக்கம்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

RISHABH PANT, HOLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்