தனியாளாக சதமடித்து அசத்திய 'ரிஷப் பண்ட்'... மறுகணமே 'கோலி' கொடுத்த அசத்தல் 'ரியாக்ஷன்'... 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதன்பிறகு ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கில் மற்றும் கோலி ஆகியோர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ரோஹித் ஷர்மா மற்றும் ஓரளவு சிறப்பாக ஆடியிருந்த நிலையில், ஏழாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த பண்ட் - சுந்தர் ஜோடி, சிறப்பாக ஆடி, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிலும், ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிதறடித்தார்.



 

இறுதியில், ரிஷப் பண்ட் 101 ரன்களில் (13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். இதனிடையே, அவர் சதமடித்ததும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து கொண்டாடிய நிலையில், இந்திய கேப்டன் கோலி, தான் உட்கார்ந்திருந்த இருக்கையை விட்டு துள்ளிக் குதித்து எழுந்து, அங்கிருந்து ஓடி வந்து ரிஷப் பண்டின் சதத்தைக் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள், தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்