"'ஐபிஎல்'ல அவர விட 'சூப்பர்' பிளேயர்ஸ் எல்லாம் இருக்காங்க..." ஏன் இப்டி பண்ணிட்டு இருக்காரு??..." 'இளம்' வீரரை வெச்சு செஞ்ச 'நெட்டிசன்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிக எளிதில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த போட்டியில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்த போது, அந்த அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். பேட்டிங் சைடில் நின்ற ஸ்டியோனிஸ் பந்தை அடித்த நிலையில், அது ஃபீல்டருக்கு அருகே சென்றது. அப்போது பந்து எங்கே செல்கிறது என்பதை கூட கவனிக்காமல் மறுமுனையில் நின்ற ரிஷப் பண்ட், ரன் ஓடினார். 




 

இதன் காரணமாக, அவர் ரன் அவுட் செய்யப்பட்ட நிலையில், அவரை ஐபிஎல் ரசிகர்கள் அதிகம் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சீசனில் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ரிஷப் பண்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் அவரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள், அடுத்த தோனியாக ரிஷப் பண்ட்டை பார்ப்பது தவறு என்றும் தெரிவித்து வருகின்றனர்.



 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்