"மேட்ச் ஆடுனது போதும், வெளியே வாங்க".. கோபத்தில் வீரர்களை அழைத்த ரிஷப் பண்ட்.. மைதானத்தில் சில நிமிடம் நீடித்த சண்டை .‌. என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று (22.04.2022) நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

Advertising
>
Advertising

இதனிடையே, இந்த போட்டி முடியும் தருவாயில், டெல்லி அணியினர் கோபமடைந்து போட்டியை நிறுத்த முற்பட்ட சம்பவம், அதிகம் பரபரப்பை கிளப்பி இருந்தது.

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்யவே, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

அடுத்தடுத்து சதங்கள்

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் அணி வலுவான தொடக்கத்தை அமைத்திருந்தது. படிக்கல் 54 ரன்களும், ஜோஸ் பட்லர் 116 ரன்களும் எடுத்திருந்தனர். கடந்த போட்டியிலும் சதமடித்திருந்த பட்லர், தொடர்ந்து இரண்டாவது சதத்தையும் அடித்துள்ளார். இந்த தொடரில், அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். 7 போட்டிகளில் மூன்று சதங்களுடன் மொத்தம் 491 ரன்கள் குவித்துள்ளார் பட்லர்.

20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்திருந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில், ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் இது பதிவாகி உள்ளது. பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தது.

கடைசி வரை பரபரப்பு

விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தாலும், மறுபக்கம் களத்தில் வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடுவதை நிறுத்தவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில், கடைசி இரண்டு ஓவர்களுக்கு டெல்லி அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. அப்போது, 19 ஆவது ஓவரை வீசிய பிரஷித் கிருஷ்ணா, ஒரு ரன் கூட கொடுக்காமல், அதே ஓவரில் லலித் யாதவ் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

நோ பால் சர்ச்சை

இதனால், கடைசி ஓவரில் 36 ரன்கள் வேண்டும் என்பதால், ஏறக்குறைய ராஜஸ்தானின் வெற்றி உறுதியானது என்றே அனைவரும் கருதினர். ஆனால், கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார் போவல். இதனால், டெல்லி அணி வெற்றி பெறுமோ என்ற கேள்வியும் எழுந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், திடீரென மைதானத்தில் சில நிமிடங்கள் போட்டி தடைபட்டது.

போவல் சிக்சருக்கு அடித்த மூன்றாவது பந்து, நோ பால் போல தோன்றியது. ஆனால், கள நடுவர்கள் நோ பால் கொடுக்கவில்லை. இதனால், வெளியே இருந்த டெல்லி அணியினர், ஒரு நிமிடம் கடுப்பாகினர். பார்ப்பதற்கு நோ பால் போன்றே இருந்ததால், அவர்கள் நடுவர்களிடம் வெளியே இருந்து கொண்டு முறையிட்டனர். அந்த அணியின் பயிற்சியாளர் ஒருவரும் நேராக மைதானத்திற்குள் சென்று, நடுவர்களிடம் பேசிக் கொண்டு நின்றார்.

மேட்ச்'ச நிறுத்துங்க முதல்ல..

இதற்கு மத்தியில், டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர்களை வெளியே வருமாறும் கோபத்தில் அழைத்தார். அவர் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த டெல்லி அணியினரும் போட்டியை நிறுத்த வேண்டி தான் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு வேளை நோ பால் கொடுத்திருந்தால், போட்டியின் முடிவு கூட மாறி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தால், சில நிமிடம் போட்டி தடைப்பட்டிருந்தத. தொடர்ந்து போட்டிக்கு பின்னர், ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர், நோ பால் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….
https://www.behindwoods.com/bgm8/

RISHABHPANT, RR VS DC, IPL 2022, நோ பால், ரிஷப் பண்ட், NO BALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்