"'ஐபிஎல்' வருது... கொஞ்சம் ஆச்சும் மீதி வைங்கப்பா..." 'இந்திய' வீரர்களை கலாய்த்து 'ரிக்கி பாண்டிங்' போட்ட 'டீவீட்'... செம 'வைரல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி தோய்ல்வியடைந்திருந்த நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றி கண்டது. சில போட்டிகளில் பிட்ச் மோசமாக இருந்ததாக பல விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியிருந்தனர்.

அதிலும் குறிப்பாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். இருவரும் இணைந்து இந்த தொடரில், மொத்தம் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதே போல, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் அணிக்குத் தேவையான சமயங்களில் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தியிருந்தார். இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியுடனான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் முடிவடைந்ததும் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இதில், அஸ்வின், ரிஷப் பண்ட் மாற்று அக்சர் படேல் ஆகியோர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடவுள்ளனர். இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், இந்த மூவரையும் பாராட்டியும், சற்று கிண்டலாகவும் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

 



அதில், 'டெல்லி அணியுடன் விரைவில் இணைந்து, பணியை மேற்கொள்ள ஆவலாக உள்ளேன். இங்கிலாந்து தொடரில் நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ள அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோர், ஐபிஎல் தொடரிலும் எடுக்க வேண்டி சில விக்கெட்டுகளை மீதி வைப்பார்கள் என நினைக்கிறேன். அதே போல, ரிஷப் பண்ட்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்' என அவர் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்