பிரபல 'ஐபிஎல்' அணி கேட்ட 'கேள்வி'... இரண்டே வார்த்தையில் 'ஜடேஜா' போட்ட 'கமெண்ட்'.. இதான் இப்போ செம 'வைரல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடவுள்ளது.

இதன் முதல் போட்டி, நாளை அகமதாபாத் மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இரு அணிகளும் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றனர். முன்னதாக, இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, காயம் ஏற்பட்ட நிலையில், அவரால் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் டி 20 தொடரில் பங்குபெற முடியவில்லை.

இதிலிருந்து, ஜடேஜா மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், தான் பயிற்சி பெற்று வருவது தொடர்பான வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களை பகிர்ந்திருந்தார். மேலும், கிரிக்கெட் போட்டிகள் எதுவும் ஆடாமல் இருந்து வரும் ஜடேஜா, அதிக நேரங்களை சமூக வலைத்தளங்களில் செலவிட்டு வருகிறார்.



புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது மட்டுமில்லாமல், சில பதிவுகளில் கமெண்ட் செய்தும் வருகிறார். அவர் அப்படி செய்த கமெண்ட் ஒன்று தான், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தங்களது ட்விட்டர் பக்கத்தில், 'யார் 2025 ஆம் ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பார்?' என கேட்டிருந்தது. இந்த பதிவிற்கு, பல கிரிக்கெட் வீரர்களின் பெயரை ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதற்கு தனது பெயரையே ஜடேஜா கமெண்ட் செய்துள்ளார்.


இந்த பதிவு ரசிகர்களிடையே அதிகம் வைரலான நிலையில், ராஜஸ்தான் அணியும் பதிலுக்கு, 'இந்த விவாதத்தை இதோடு முடித்துக் கொள்வோம்' என கமெண்ட் செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலுள்ள ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்