"அப்டி ஒரு 'போஸ்' குடுத்தது என்னோட தப்பா??..." வசமாக சிக்கிய 'புஜாரா'... வச்சு செஞ்ச 'ரோஹித்', 'அஸ்வின்'... வைரலாகும் 'போட்டோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் ஆட்டம் இந்த போட்டியில் அமைந்திருந்தது. தொடக்கம் முதலே இந்திய அணி அதிக ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், கோலி, ரோஹித் ஷர்மா, ஷமி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத போதும் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு ரஹானேவின் கேப்டன்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிக்கு பின்னர் 1 - 1 என தொடர் சம நிலையில் உள்ளதையடுத்து, அணி வீரர்களை பாராட்டி அஸ்வின் இன்ஸ்டாவில் வீரர்கள் உடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை இட்டுள்ளார். இதில் அஸ்வினுடன் ரஹானே, புஜாரா, பும்ரா, ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகிய வீரர்கள் உடனிருந்தனர். 



 

இந்த புகைப்படத்தின் கீழ் ரோஹித் ஷர்மா செய்த கமெண்ட்டும், அதற்கு அஸ்வின் தெரிவித்த பதிலும் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது. புஜாரா நேராக நிற்பதை ரோஹித் ஷர்மா குறிப்பிட்ட நிலையில், அதற்கு அஸ்வின், 'புஜாராவின் தலைக்குள் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கிறது' என நக்கலாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்