"'ஐபிஎல்' முடிஞ்சாலும் இவங்க விடமாட்டாங்க போலயே..." 'டெல்லி' அணியை சீண்டிய 'ராஜஸ்தான்',.. "இதுக்கு ஒரு 'END'u இல்லையா??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. இந்த தொடர் முழுவதிலும் அனைத்து அணிகளின் ட்விட்டர் பக்கங்களிலும் தங்களது அணி தொடர்பான தகவல்கள் மற்றும் மீம்ஸ்களை பகிர்ந்து வந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பகிர்ந்த ட்வீட்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.

மற்ற அணிகள் குறித்தும், தங்கள் அணிகளின் வீரர்களை குறித்தும் ஜாலியாக ட்வீட் செய்வதே ராஜஸ்தான் அணி ட்விட்டரின் சிறப்பம்சம். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த பின்னரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை குறிப்பிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செய்த ட்வீட் ஒன்று தற்போது ஹிட்டடித்துள்ளது.

டெல்லி அணி, தங்களது ட்வீட் ஒன்றில் ராஜஸ்தான் அணியை டேக் செய்து, 'எங்களது ரசிகர்களை மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பொழுது போக்கி வருகிறோம்' என குறிப்பிட்டிருந்தது. டெல்லி அணியின் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் ராஜஸ்தான் அணி ட்வீட் ஒன்றை குறிப்பிட்டுள்ளது. 

 

அதில், 'ஐபிஎல் கோப்பையை ஒருமுறையாவது ஜெயித்த அணிகளின் ரசிகர்களுக்கு குட் நைட்' என டெல்லி அணியை கலாய்த்து பதிலடி ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது, இதுவரை ஒருமுறை மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற டெல்லி அணி, கோப்பையை கைப்பற்றவில்லை. ஆனால், ராஜஸ்தான் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வென்றிருந்தது. 

 

இதனைக் குறிப்பிட்டு ராஜஸ்தான் அணி செய்த ட்வீட் தற்போது ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்