"எந்த 'பிளேயர்' சியர் லீடஸால அதிகம் தடுமாறுவாங்க??.." கொஞ்சம் கூட யோசிக்காம... 'ரெய்னா' சொன்ன 'அல்டிமேட்' பதில்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முறை விலகியிருந்தார்.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னா தனது மனைவி பிரியங்கா ரெய்னாவுடன் பிரபல டிவி தொகுப்பாளர் கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல குதர்க்கமான கேள்விகளை கேட்பதில் பிரபலமான கபில் சர்மா, ரெய்னாவிடமும் அதே போன்ற சில கேள்விகளை முன் வைத்தார். 

சுரேஷ் ரெய்னாவிடம் கபில் சர்மா, ஐபிஎல் தொடரின் போது சியர் லீடர்ஸால் எந்த வீரர் அதிகமாக தடுமாறுவார் என்ற கேள்வியை கேட்டார். இதற்கு பதிலளித்த ரெய்னா, சியர்லீடர்சை மைதானத்தில் இருக்கும் வீரர்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்றும், தங்களது ஆட்டத்தில் மட்டுமே முழு கவனத்தை வீரர்கள் செலுத்துவார் என்றும் தெரிவித்தார். மேலும், ரசிகர்களுக்காக மட்டுமே சியர் லீடர்ஸ் ஆடுவதாகவும் ரெய்னா கூறினார். 

ரெய்னாவிடம் கேட்டது போல அவரது மனைவியிடமும் கேள்வி ஒன்றை கபில் சர்மா முன் வைத்தார். சில நேரம் வீரர்கள் டக் அவுட் ஆகும் போது, அதனை டிவியில் பார்க்கும் மனைவிகள் ஷாப்பிங் செய்ய கிளம்பி விடுவார்களா என்ற கேள்வியை எழுப்பினார். இதனை மறுத்து பதிலளித்த பிரியங்கா, மற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அங்கேயே இருப்போம் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்