இதனாலதான் எல்லாருக்கும் இவரை பிடிக்குது.. மேட்ச் முடிஞ்சதும் ‘டிராவிட்’ செஞ்ச செயல்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில், கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அதைப்போல் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது. அதனால் போட்டி வெற்றி, தோல்வி இல்லாமல் டிரா என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கான்பூர் கிரீன் பார்க் மைதான ஊழியர்களுக்கு 36000 ரூபாய் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு காரணம் போட்டியின் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை விறுவிறுப்பு குறையாமல் இருக்கும் படி மைதானத்தை தயார் செய்திருந்தனர். மேலும் ஒவ்வொரு நாளும் மைதானத்தை சிறப்பாக பராமரிப்பு செய்தனர். அதனால் அவர்களைப் பாராட்டி ராகுல் டிராவிட் இந்த சன்மானத்தை கொடுத்துள்ளார். டிராவிட்டின் இந்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

RAHULDRAVID, INDVNZ, KANPUR, GROUNDSMEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்