’இலங்கை தொடருக்கு... ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளரா?’ ..’கோலி, ரோகித் இல்லாததால்... புதிய கேப்டனும் வராரு...!’ - எகிறும் எதிர்பார்ப்பு!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜூலை மாதம் இந்திய அணி இலங்கை சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறது அங்கு நடக்கும் ஒரு நாள் போட்டியில் பங்கேற்க தயாராகும் இந்திய அணிக்கு உலகின் மிகச்சிறந்த பயிற்சியாளர்களிடையே பரவலாக அங்கீகாரம் பெற்ற டிராவிட்  பயிற்சியாளராக தேர்வாகிறார்.

ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் இந்தியா 'U-19'அணியை உலகக் கோப்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இப்போது அவர் தலைமை பயிற்சியாளரின் பாத்திரத்தை ஏற்கத் தயாராக உள்ளார், இலங்கைத் தொடருக்கு மட்டுமே,அவரது தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ) ஊழியர்களில் சிலர் உதவியாளர்களின் பங்கை ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஜூலை 13-ம் தேதி முதல் ஒருநாள் போட்டியைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணிக்கு இலங்கையில் பயிற்சி பெற குறைந்தபட்சம் ஒரு வார கால அவகாசம் கிடைக்கும்.அணி புறப்படுவதற்கு முன்னதாக பெங்களூரில் ஒரு ஆயத்த முகாம் நடத்த வேண்டும் என்ற யோசனை இருந்தது.இந்தியாவின்  கோவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, அணி நிர்வாகம் இலங்கையில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பியது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா வீரர்களும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பி.சி.சி.ஐ) இலங்கைக்கு விமானம் ஏறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் வீரர்கள் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.  இதே நேரத்தில்  இலங்கை நாட்டின் கொரோனா நெறிமுறைகள் பரிந்துரைத்தால் வீரர்கள் இலங்கையிலும் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். அதே நேரத்தில் வீரர்கள் தடுப்பூசி போட்டு இருந்தால் அவர்கள் ஒரு நாள் மட்டும் தனிமைப்படுத்த வேண்டும்

இதற்கிடையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இங்கிலாந்து போட்டியில் இருப்பதால் இலங்கை போட்டிக்கு ஷிகர் தவன் கேப்டன் ஆக இருக்கிறார் . ஷ்ரேயாஸ் ஐயர் பெயரும் இதில் அடிபட்ட நிலையில் அவர் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்