'தப்பிக்கவே முடியாது’... ‘கல்யாண நாளில்’... ‘தமிழக வீரர் அஸ்வின் மனைவி பகிர்ந்த போட்டோ’... லைக்ஸ்களை அள்ளும் ட்வீட்...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தங்களது 9-வது திருமண நாளை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி பகிர்ந்த ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 13-வது சீசனில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில், தமிழக வீரரும், இந்திய அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். இவர் பங்கேற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதன்முறையாக இறுதிப்போட்டி வரை முன்னேறி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

ஐபிஎல் தொடர் முடிந்த உடன், இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பதற்காக, தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி வீரர்கள் துபாயில் இருந்து அப்படியே ஆஸ்திரேலியா சென்றனர்.  இதில் பல வீரர்களும் பிசிசிஐ அனுமதி வழங்கியதால், தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் சென்றனர்.

இதில் அஸ்வினும், தன் மனைவி ப்ரீத்தி நாரயணன் மற்றும் மகள்கள் அகிரா, ஆத்யா என்ற இருமகள்களையும் ஆஸ்திரேலியாவுக்கு உடன் அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியாவில் வரும் 27-ம் தேதி ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் முடிந்த உடன் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அந்த தொடரில் தான் அஸ்வின் பங்கேற்க உள்ளார். டெஸ்ட் தொடர் துவங்கும் வரை அவர் பயிற்சியில் ஈடுபடுவார். இதனால் தற்போது ஹோட்டல் அறையில் குவாரன்டைனில் தனது குடும்பத்தினருடன் இருக்கிறார்.

இந்த நிலையில், நவம்பர் 13 அன்று தன் 9வது திருமண நாளை மனைவி ப்ரீத்தியுடன் ஹோட்டல் அறையில் கொண்டாடினார் அஸ்வின். குவாரன்டைனில் இருப்பதால் வெளியே எங்கும் செல்ல முடியாது. இந்த நிலையில் தங்கள் திருமண நாளைப் பற்றி பதிவிட்டுள்ளார் ப்ரீத்தி.

அந்த பதிவில் ப்ரீத்தி, ‘எங்களின் 9 ஆண்டுகால மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை. குவாரன்டைனில் ஒன்றாக இருந்து, தப்பிக்கவே முடியாததை விட வேறு என்ன அதிக ரொமான்டிக்காக இருந்து விட முடியும்?’ என கூறி தங்களின் குவாரன்டைன் திருமண நாள் கொண்டாட்டம் பற்றி கூறி உள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்