'வெண்கல' பதக்கத்தை வென்றாரா பிவி சிந்து...? 'விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்...' - சீன வீராங்கனையுடன் பலப்பரீட்சை...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கல பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று (01-08-2021) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து - சீனாவைச் சேர்ந்த ஹி பிங் ஜியா ஆகியோர் ஆக்ரோஷமாக பலப்பரீட்சை நடத்தினர். மிகவும் தீவிரமாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டை 21-13 என்ற எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை கைப்பற்றுவதற்காக இருவரும் போராடினர்.

பிவி சிந்து புள்ளிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், புள்ளிகளில் மிகவும் நெருங்கி வந்தார் ஹி பிங் ஜியா. இதன் காரணமாக 2-வது செட் விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஆனாலும், ஆட்டத்தை மிகவும் அற்புதமாக கொண்டுசென்ற பிவி சிந்து 21 - 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை தோற்கடித்தார். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

2016-ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து இம்முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதி போட்டியில் சிந்து தோல்வியடைந்த காரணத்தினால் வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்