'ஐபிஎல் திரும்ப நடக்குறதெல்லாம் சரி தான்...' ஆனா 'இப்படி' ஒரு சிக்கல் வரப்போகுதே...! - என்ன செய்ய போகிறது பிசிசிஐ...?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் இரண்டாம் பாதியில் வீரர்களின் பாதுகாப்பு வளையம் காரணமாக கரிபியன் பிரிமீயர் லீக்கை (CPL) முன்கூட்டியே தொடங்கக் கோரி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான ஐபிஎல் சீசன் கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் இரண்டாம் பகுதி செப்டம்பர், அக்டோபரில் நடத்த பிசிசிஐ சனிக்கிழமை அனுமதியளித்தது. செப்டம்பர் 15-அக்டோபர் 15 இடையே மீதமுள்ள போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டம் போட்டுள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 28-ம் தேதி சிபிஎல் தொடங்குகிறது. இறுதி போட்டி செப்டம்பர் 19-ம் தேதி நடக்கிறது. இதனால், சிபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்தக் கோரி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகையில்,

"மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சிபிஎல்-ஐ முன்கூட்டியே முடிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அப்படி முன்கூட்டியே நடத்தும்பட்சத்தில் வீரர்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து ஐபிஎல் பாதுகாப்பு வளையத்துக்கு மாற உதவும். மூன்று நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் காலமும் முன்கூட்டியே நிறைவடையும்."

இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், முக்கிய வீரர்கள் சிலர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் முதல் சில ஆட்டங்களில் பங்கேற்க முடியாமல் போகலாம்.

கைரன் பொல்லார்ட் (MI), கிறிஸ் கெயில் (KXIP), டுவைன் பிராவோ (CSK), ஷிம்ரோன் ஹெத்மயர் (DC), ஜேசன் ஹோல்டர் (SRH), நிகோலஸ் பூரன் (KXIP), சுனில் நரைன் (KKR) ஆகியோரால் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாது. 

இது ஐபிஎல் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்