VIDEO: சொல்ல சொல்ல நிற்காம 'மின்னல்' வேகத்துல ஓடிப்போய்... 'கிரவுண்ட்ல மேட்ச் நடந்துட்டு இருக்கப்போ...' - ரோஹித் 'ரசிகர்' செய்த காரியம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து-இந்தியா டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் ரோஹித் ஷர்மாவின் காலில் விழுந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

பொதுவாக இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு அனைவருக்கும் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. நம்முடைய தேசிய விளையாட்டான ஹாக்கியை விட பிரபலமானது கிரிக்கெட் தான்.

அதேபோல், கிரிக்கெட் வீரர்களின் மீதும் ரசிகர்களுக்கு அதிகளவில் கிரேஸ் இருக்கும். எப்படியாவது ஒரு முறை அவர்களை பார்க்க வேண்டும், தங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரரை தொட்டு விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் நேற்றைய (19-11-2021) தொடரில் நடைபெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையே 20-20 கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் நடைபெற்றது.

நடந்து முடிந்த 20 ஓவர்களுக்கான தொடரில்  இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி-20 போட்டி நேற்று ஜார்கண்டில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் பௌலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.

இந்நிலையில், போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்து ரோஹித் இருந்த இடத்திற்கு ஓடி சென்றுள்ளார்.

ரோஹித் அருகே சென்ற அந்த ரசிகர் அவருடைய காலில் விழுந்து வணங்கினார். உடனே ரோஹித் அவரை எழுப்பினார். இந்த சம்பவம் குறித்தான வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

 

FEET, FAN, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்