"1958.. அப்பாவுக்கு கொடுத்த சத்தியம்".. கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மனம் கலங்க வைக்கும் ட்வீட்!!.. வைரல் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக கருதப்படும் பீலே மரணமடைந்திருப்பது உலக கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்... பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உலக தலைவர்கள் இரங்கல்..!

பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக கொண்டாடப்படுபவர். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. தன்னுடைய 22 வருட கால்பந்து விளையாட்டு வரலாற்றில் 1282 கோல்கள் அடித்து, பிரேசில் அணியின் எப்போதைக்குமான லெஜெண்ட் வீரராக கருதப்படுபவர் பீலே.

எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ (Edson Arantes do Nascimento) என்ற இயற்பெயர் கொண்ட பீலே, பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். இதனிடையே, கடந்த சில மாதங்களாக உடல்நல பிரச்சனைகளால் பீலே அவதிப்பட்டு வந்ததாக தகவல் கூறும் நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக இன்னும் அவரது உடல்நிலை மோசமானதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சைக்கு பீலேவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என பிரேசில் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் பீலே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை பெற்று வந்தார். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று பீலேவின் குடும்பத்தினர் அவருடன் மருத்துவமனையில் தங்கியிருந்தனர். இந்நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக அவருடைய மகள் அறிவித்திருக்கிறார். இதனால் உலக கால்பந்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

உலக அளவில் கால்பந்து பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கல்களை கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், பீலே கடைசியாக ட்விட்டரில் பகிர்ந்த பதிவு தற்போது கால்பந்து ரசிகர்களை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

1958 ஆம் ஆண்டு புகைப்படம் ஒன்றை கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ட்விட்டரில் பகிர்ந்திருந்த பீலே, "1958 ஆம் ஆண்டு பிரேசில் தெரு வீதியில் நடக்கும் போது அப்பாவுக்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவதை எண்ணி நடந்து கொண்டிருந்தேன். தற்போது பிரேசிலில் என்னை போல் பலரும் உலக கோப்பையை பிரேசிலுக்காக வெல்வேன் என நிச்சயம் சத்தியம் செய்திருப்பார்கள். மருத்துவமனையில் இருந்து நிச்சயம் நான் உலக கோப்பை போட்டிகளை பார்த்து பிரேசிலுக்கான ஆதரவு அளிப்பேன்" என குறிப்பிட்டிருந்தார்.

பிரேசில் அணி கால்பந்து உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் இறுதி போட்டியில் வெற்றி பெற்றிருந்த அர்ஜென்டினா அணியையும், அதே போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து வரலாறு படைத்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவையும் பீலே பாராட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை சரியில்லாத சூழலில் மருத்துவமனையில் இருந்த படி, தொடர்ந்து கால்பந்து போட்டிகள் குறித்து பீலே பேசி இருந்தது தற்போது பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

Also Read | விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்.. டிவைடரில் மோதி தீப்பிடித்த கார்.. அதிர்ச்சி சம்பவம்!!

PELE, PELE TWEET AND INSTAGRAM POSTS, FOOTBALL, BRAZILIAN FOOTBALL LEGEND PELE, BRAZILIAN FOOTBALL LEGEND PELE PASSED AWAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்