இந்திய வீரர் கோலிக்காக.. பாகிஸ்தான் ரசிகர் செஞ்ச சர்ப்ரைஸ் சம்பவம் .. போட்டி நடுவே நெகிழ்ச்சி..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

முன்னதாக, மொஹாலியில் வைத்து நடைபெற்றிருந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது பெங்களுர் சின்னசாமி மைதானத்தில், நேற்று ஆரம்பமானது.

முதல் நாள் முடிவு

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக, ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் மட்டும் எடுத்து திணறி வருகிறது.

டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே மொத்தம் 16 விக்கெட்டுகள் சென்றுள்ளதால், முதல் டெஸ்ட் போட்டியைப் போல, இதுவும் 3 அல்லது 4 நாட்களில் முடிந்து விடும் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோலியின் சதம்

இதனிடையே, இரண்டாம் டெஸ்ட் போட்டியில் கோலி 23 ரன்களில் அவுட்டாகியதால், ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, சதமடிக்காமல் இருந்து வரும் கோலி, நூறாவது டெஸ்டில் ரசிகர்கள் முன்னிலையில் சதமடித்து அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மொஹாலி டெஸ்டில் 45 ரன்களில் அவர் அவுட்டானார். தொடர்ந்து, தற்போதைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 23 ரன்களில் அவுட்டாகியுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதனால், அவர் தன்னுடைய 71 ஆவது சதத்தை எப்போது அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது பற்றி, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானைச் சேர்ந்த கோலி ரசிகர் ஒருவர், உங்களின் சதத்தினை பாகிஸ்தான் மைதானத்தில் காண ஆவலாக உள்ளோம் என குறிப்பிட்டு பேனர் ஒன்றை கொண்டு வந்திருந்தார்.

"டியர் கோலி"

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு கோலி ரசிகர், மீண்டும் கோலி குறித்த போஸ்டர் ஒன்றை, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் கொண்டு வந்துள்ளார். அவரின் போஸ்டரில், "டியர் விராட், நீங்கள் செஞ்சுரி அடித்தாலும், இல்லை என்றாலும், நீங்கள் தான் எப்போதும் என்னுடைய ஹீரோ" என குறிப்பிட்டுள்ளார்.

வைரல் போஸ்டர்

பலரும், கோலி செஞ்சுரி அடிக்காமல் திணறி வருவது பற்றி, சில விமர்சன கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும், நாடு கடந்து பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், சதமடிக்காமல் போனாலும்  கோலி தான் என் ஹீரோ என தெரிவித்துள்ளது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

VIRATKOHLI, PAKISTAN FAN, PAK VS AUS, KOHLI CENTURY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்