VIDEO: ஹலோ உள்ள வரலாமா..? யாரும் எதிர்பார்க்காத ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த பாகிஸ்தான் அணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நம்பீயா அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்ததும் பாகிஸ்தான் வீரர்கள் செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியும், நமீபியா அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 79 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 70 ரன்களும், முகமது ஹபீஸ் 32 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த நமீபியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக பாகிஸ்தான் நுழைந்துள்ளது.

இந்த நிலையில், போட்டி முடிந்த பின் பாகிஸ்தான் வீரர்கள் செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்போட்டியில் பலம் மிகுந்த பாகிஸ்தான் அணியை எதிர்த்து நமீபியா மோதியது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியே அடையாமல் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

இப்போட்டியிலும் 190 என்ற இமாலய வெற்றி இலக்கை பாகிஸ்தான் நிர்ணயித்தது. ஆனாலும் நமீபியா அணி, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தாலும், டேவிட் வைஸ் (43 ரன்கள்) மற்றும் கிரேக் வில்லியம்ஸ் (40 ரன்கள்) ஆகிய வீரர்கள் பாகிஸ்தான் பவுலர்கள் சவால் அளிக்கும் வகையில் விளையாடினர்.

இதனால் போட்டி முடிந்ததும் நமீபியா அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அவர்களை பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

PAKISTAN, PAKVNAM, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்