மகளிர் ஹாக்கி அணிக்கு போன் போட்ட பிரதமர் மோடி!.. பேசப் பேச உடைந்து அழுத வீராங்கனைகள்!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியினருடன் பிரதமர் மோடி உரையாடிய போது, வீராங்கனைகள் கண் கலங்கி அழுத சம்பவம் வைரலாகி வருகிறது.

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மகளிர் ஹாக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஹாக்கி மகளிர் அணியின் பங்களிப்பை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.

அந்த தொலைபேசி உரையாடலின்போது, இந்திய அணி வீராங்கனைகள் கண் கலங்கினர். அப்போது அவர்களுக்கு ஆறுதல் உரைத்து பிரதமர் மோடி நம்பிக்கை ஊட்டினார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்