தனிப்பட்ட காரணங்களால் விலகிய 'பெங்களூர்' வீரர்... "அவருக்கு பதிலா புதுசா ஒருத்தர எடுத்துருக்கோம்..." 'ஆர்சிபி' வெளியிட்ட அதிகாரபூர்வ 'தகவல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால், சில அணிகளின் வீரர்கள், பயிற்சியையும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, புதிதாக நியூசிலாந்து வீரர் ஒருவரை தற்போது அணியில் எடுத்துள்ளது.


பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் பிலிப், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால், அவருக்கு மாற்றாக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் என்பவரை அணியில் எடுத்துள்ளது.

ஜோஷ் பிலிப்பின் தொகையான 20 லட்ச ரூபாய்க்கு ஆலனை பெங்களூர் அணி எடுத்துள்ளது. ஃபின் ஆலன் பங்கேற்கவுள்ள முதல் ஐபிஎல் தொடர் இதுவாகும்.






இந்த சீசனின் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்