‘அப்படி போடு’.. ரசிகர்கள் செலக்‌ஷன்.. லக்னோ அணிக்கு பெயர் என்ன தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

லக்னோ அணிக்கு புதிய பெயர் வைத்து அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் லக்னோ, அகமதாபாத் என்ற இரு அணிகள் இந்த ஆண்டு முதல் இணைய உள்ளது. இதில் லக்னோ அணியை ஆர்.பி.சஞ்ஜீவ் கோயங்கா குழுமம் வாங்கியுள்ளது.

இந்த நிலையில், லக்னோ அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்’ (Lucknow Super Giants) என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சஞ்சிவ் கோயங்கா, ‘ரசிகர்கள்தான் இந்த பெயரை சூட்டினார்கள். வழக்கம் போல் அணிக்கு ஆதரவளித்து ஆசிர்வதியுங்கள்’ என்று கூறினார். ஏற்கனவே சஞ்சிவ் கோயங்கா புனே அணியை வாங்கிய போது, அந்த அணிக்கு ‘ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்’ என்ற பெயரை சூட்டியிருந்தார். தற்போது அதே பெயரை லக்னோ அணிக்கும் வைத்துள்ளார். இரண்டு ஆண்டுகள் விளையாடிய அந்த அணிக்கு, தோனி ஒரு ஆண்டு கேப்டனாக செயல்பட்டார்.

லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளஃவரும், ஆலோசகாரக கௌதம் கம்பீரும் நியமிக்கப்பட்டுள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 17 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் இந்திய வீரர் ரவி பிஸ்னாயை ஏலத்திற்கு முன்பே லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்று மூன்று வார்த்தை வருமாறு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என லக்னோ அணி நிர்வாகம் பெயர் வைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

KLRAHUL, IPL, LUCKNOWSUPERGIANTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்