"'மாஸ்'ஸா??.. கெத்தா??..." 'இந்திய' அணியில் மீண்டும் இடம்பிடித்த 'வீரர்'... வேற 'லெவல்' மகிழ்ச்சியில் 'ரசிகர்கள்'... "யாருங்க அது??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி 20 போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இதுவரை நடந்த முடிந்த நான்கு டி 20 போட்டிகளில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில், வெற்றி பெறும் அணி, தொடரை கைப்பற்றும். தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், இந்த போட்டியில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.

இதனிடையே, இன்றைய போட்டியில், இந்திய அணியில் ஆடும் வீரர் ஒருவரால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆஸ்திரேலிய தொடரில் வலைப்பந்து வீச்சாளராக சென்ற தமிழக வீரர் நடராஜனுக்கு, சில வீரர்கள் காயமடைந்ததன் காரணமாக, சர்வதேச தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான நடராஜன், தனது திறமையான பந்து வீச்சால், முத்திரையை பதித்து, பல முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் ஆடவும் அவர் தேர்வானார். ஆனால், காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நடராஜனால், முதல் நான்கு போட்டிகளில் களமிறங்க முடியவில்லை.

இந்நிலையில், இன்றைய போட்டியில், தொடக்க வீரர் கே எல் ராகுலுக்கு பதிலாக, தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு, நடராஜனை மீண்டும் இன்றைய போட்டியில் பார்க்கவுள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 











அதே போல, தொடர் யார் என்பதை நிர்ணயிக்கும் இன்றைய போட்டியில், நடராஜன் சிறப்பாக பந்து வீசினால், வரவிருக்கும் டி 20 உலக கோப்பைத் தொடரில், அவர் பங்கு பெறுவதற்கான வாய்ப்பாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்