"அண்ணா, நீங்க தான் உண்மையான 'மாஸ்டர் தி பிளாஸ்டர்'... நெகிழ்ந்து போன 'நடராஜன்'... ஆனா நீ இல்லாம போனது 'வருத்தம்'பா... பதிலுக்கு உருகிய 'இந்திய' வீரர்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரை தமிழக அணி, இரண்டாவது முறையாக வென்றிருந்தது.

மொத்தம் 38 அணிகள் கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில் பரோடா அணியை தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி வீழ்த்தி, இரண்டாவது முறையாக சையது முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது.


இதற்காக, கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் தமிழக அணி வீரர்களை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்த வெற்றியைப் பாராட்டி ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.



 

அதில், 'சையது முஷ்டாக் அலி டிராபியை தமிழக அணி வென்றுள்ளது, அணி வீரர்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. அபாரமான இந்த சாதனையைக் கண்டு நான் பெருமை கொள்கிறேன். ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. தலை வணங்குகிறேன் தினேஷ் கார்த்திக் அண்ணா. நீங்கள் தான் உண்மையான 'மாஸ்டர் தி பிளாஸ்டர்' என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து ட்வீட் செய்த தினேஷ் கார்த்திக், 'மிக்க நன்றி நட்டு.  நீ எங்களுடன் இல்லாதது வருத்தம் தான். நீ அடைந்துள்ள உயரத்தைக் கண்டு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. பல இளைஞர்கள் தங்களது கனவுகளை நனவாக்க நீ உந்து சக்தியாக இருந்து கொண்டிருப்பாய்' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடராஜனும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவு, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்