அவங்கள 'அப்படியெல்லாம்' குறைச்சு மதிப்பிட முடியாது...! 'அந்த விஷயத்துல' எங்கள விட ஒருபடி மேல இருக்காங்க...! - புகழ்ந்து தள்ளிய சூர்யகுமார் யாதவ்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் டெல்லி அணி குறித்து செய்தியாளர்களிடம் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

14வது ஐபிஎல் சீசனில் இதுவரை முடிந்த 12 லீக் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது.

இந்த இரு அணிகளிலும், அணியின் கேப்டன் சில மாற்றங்களை செய்துள்ளனர். அதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடம் மில்னே பதிலாக ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மெரிவாலா மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு பதிலாக சிம்ரன் ஹெய்ட்மர் மற்றும் அமித் மிஸ்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மன் சூரியகுமார் யாதவ் டெல்லி அணி குறித்து செய்தியாளர்களிடம் பேசியது தற்போது வைரலாகி உள்ளது.

'ஐபில்-லின் கடந்த சீசனுடன் ஒப்பிடுகையில் எதுவும் மாறவில்லை. ஆனால் நான் எனது ஆட்டத்தில் இன்னும் தெளிவாகிவிட்டேன்.

நாங்கள் எற்கனவே இங்கு 3 போட்டிகளில் விளையாடி இருப்பதால் இந்த மைதானத்தின் ஏற்ற இறக்கங்கள் எல்லாம் தெரியும்  இது எங்களுக்கு ஒரு அட்வான்டேஜாக இருக்கிறது. ஆனால் டெல்லி அணியும் சிறந்த அணியாக இருப்பதை மாற்ற முடியாது.

டெல்லி அணி கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் எங்களுக்கு மேல் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்றைய போட்டியில் கவனம் செலுத்துகிறோம்

இதுபோன்று சவாலான சூழ்நிலைகளில் நான் அடிக்கும் விதத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நான் ஒரு சில ஆட்டங்களை முடித்து தர வேண்டும் என்று விரும்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்