VIDEO: ‘இப்படியொரு ரசிகர்கள் கிடைச்சதுக்காக..!’ போட்டி முடிஞ்சதும் ‘தல’ தோனி சொன்ன வார்த்தை.. உருகும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ரசிகர்களுக்கு குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கும் இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் (Playoffs) சுற்றுக்கு முதல் அணியாக சிஎஸ்கே தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ‘சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்தது சிறப்பான தருணம். அதற்கு காரணம் கடந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. அப்போது மீண்டும் வலிமையாக வருவோம் என்று கூறினோம். அதை இந்த ஆண்டு செய்துள்ளோம். பவுலிங், பேட்டிங் என அனைத்திலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்’ என கூறினார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் குறித்து பேசிய தோனி, ‘ரசிகர்கள் ஆரம்பம் முதலே அற்புதமான ஆதரவு கொடுத்து வருகின்றனர். நன்றாக விளையாடும் போதும், மோசமாக விளையாடும் போதும் ரசிகர்கள் எங்களை சோர்வடையாமல் பார்த்துக் கொள்கின்றனர். இப்படியொரு ரசிகர்கள் எங்களுக்கு கிடைத்ததற்காக, நான் சிஎஸ்கே வீரர் என்று சொல்வதை பெருமையாக கருதுகிறேன்’ என அவர் கூறியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது பேசிய தோனி, அடுத்த ஐபிஎல் தொடரில் வலிமையுடன் திரும்பி வருவோம் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்