Video: தோத்தத நெனச்சு 'ரொம்ப' கஷ்டமா தான் இருக்கு... ஆனாலும் அந்த விஷயம் 'நம்பவே' முடியல!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியின் மோசமான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சில விஷயங்கள் நடந்துள்ளன. அதில் முதலாவது ஷ்ரேயாஸ் அடித்த பந்தை தோனி பாய்ந்து சென்று பிடித்தது தான். அந்தரத்தில் அவர் பறந்ததை பார்த்து பறவையா? அல்லது பிளைட்டா? என வியந்து போயினர்.

ஒட்டுமொத்த ரசிகர்களும் அந்த வீடியோ பார்த்து மனுஷனுக்கு வயசே ஆகாதா? என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இரண்டாவதாக பிரித்வி ஷாவை தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தார். மேலும் இதைப்பார்த்து பழைய தோனி திரும்ப வந்து விட்டார் என ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல பிரித்வி கண்ணில் தூசி விழுந்து தோனி ஊதிவிடும் காட்சியும் ரசிகர்களின் மனதை வென்றது.

கடைசியாக கடந்த 2 போட்டிகளில் ஆடாத அம்பாதி ராயுடு அடுத்த போட்டியில் அணிக்கு திரும்புவார் என தோனி தெரிவித்து இருக்கிறார். இதேபோல ஒழுங்காக ஆடாத சில வீரர்களை கழட்டி விடுவதற்கும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த போட்டியில் சென்னை அணி கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதேபோல ரெய்னாவை மீண்டும் அணிக்கு அழைக்க வேண்டும் என்றும் சென்னை அணிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்