Video: 'சின்ன' பையன முன்னாடி 'எறக்கி' விட்டதுக்கு இதுதான் காரணமா?... 'தெறிக்க' விடும் சைக்காலஜி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று நடைபெற்ற சென்னை-மும்பை அணிகள் இடையிலான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஆனால் ராயுடுக்கு அடுத்ததாக தோனி இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாம், ஜடேஜா இறங்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். இதனால் தான் தோனி இறங்காதது அவர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது. இந்த நிலையில் தோனி தனக்கு பதிலாக ஜடேஜா, சாம் கரணை இறக்கி விட்டதற்கான காரணம் என்னவென்று தற்போது வெளியாகி இருக்கிறது.

அதாவது வாட்சன், விஜய், ராயுடு, டூ பிளசிஸ் ஆகிய அனைவரும் வலது கை ஆட்டக்காரர்கள். ஆனால் ஜடேஜா, சாம் இருவரும் இடது கை ஆட்டக்காரர்கள். இதனால் தான் தோனி அவர்களை இறக்கி விட்டாராம். அதேபோல திடீரென இறங்கிய சாம் 6 பந்தில் 18 ரன்களை அதிரடியாக குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய திருப்புமுனையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தோனி இது ஒரு உளவியல் ரீதியான விஷயம் என தெரிவித்து இருக்கிறார். அதாவது வரிசை மாறி வீரர்களை அனுப்பி வைத்ததால் மும்பை அணி அதற்கு தயாராக இல்லாமல் போய் விட்டது. கேதார் ஜாதவ், அவரைத்தொடர்ந்து தோனி இறங்குவார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருக்க சாம், ஜடேஜாவை இறக்கி மேட்சை வெற்றிகரமாக தோனி முடித்தது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்