"'இந்த' விஷயங்கள மட்டும் சரி பண்ணிட்டு... இன்னைக்கி 'மேட்ச்' ஆடுனா... 'சிஎஸ்கே' சும்மா பட்டைய கெளப்பலாம்..." கணித்துச் சொன்ன முன்னாள் 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில், சிஎஸ்கே அணி இந்த தொடரில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் மோசமான பார்மில் உள்ளது. இதன் காரணமாக, பல மீம்ஸ்கள் மற்றும் விமர்சனங்கள் சென்னை அணியை சுற்றி வலம் வந்தது. டோனியின் கேப்டன்சி குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் கேள்வி எழுப்பினர். சென்னை அணியின் தொடக்க பேட்டிங் தொடங்கி சுழற்பந்து வீச்சு என அனைத்தும் ஆட்டம் கண்டுள்ள நிலையில், அணியில் இன்று பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தோனி உள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 'ஐபிஎல் தொடர்களில் சிறந்த அணியான சிஎஸ்கே, எப்போதாவது லீக் போட்டிகளில் நெருக்கடியை சந்திக்கும். அத்தகைய நெருக்கடியை தான் தற்போது சிஎஸ்கே அணி சந்தித்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியில், அனைத்து விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கி, தோனி அணியை வெற்றி பெறச் செய்வார் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்' என்றார்.

மேலும், 'சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு வீரர்களும் டி20 போட்டியை வென்று கொடுக்கும் திறமைகள் உள்ளவர்கள். கேப்டன் தோனி, அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அணியின் பவுலிங்கில் அவர் சற்று கவனம் செலுத்த வேண்டும்' என்று சஞ்சய் மஞ்ச்ரேகர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்றைய போட்டியில் ராயுடு களமிறங்கவுள்ளதால், விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல, சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இளம்வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மிடில் ஆர்டரில் ஆட சற்று சிரமப்படுகிறார். அதனால், அவருக்கு பதிலாக பந்து வீச்சாளர் ஒருவரை அணியில் இடம்பெறச் சொல்லாம் எனவும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்