"அவரு ஃபோட்டோ இருந்தே ஆகணும்".. கல்யாண பத்திரிக்கையில் தோனி.. இணையத்தை கலக்கும் ஃபோட்டோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது ஐபிஎல் தொடரை தான் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளிலேயே.. டிராபிக்கில் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த வாலிபர்.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று ஆடி வருவதால் ஒவ்வொரு போட்டிகளும் மிக விறுவிறுப்பாக சென்ற வண்ணம் இருக்கும். இதனால், உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்தும் வருகின்றனர்.

அப்படி இருக்கையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

ஐபிஎல் தொடரில் தோனி

மேலும், லீக் போட்டிகளுக்கான அட்டவணையையும் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது. ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதால் சில அணிகள் தற்போது முதலே பயிற்சியை ஆரம்பித்து தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதே போல, இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சூழலில், தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

மறுபக்கம், சுமார் 4 ஆண்டுகள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட உள்ளதால், தோனி உள்ளிட்ட மற்ற சிஎஸ்கே வீரர்களை பார்க்கவும் மிகுந்த உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு, சிஎஸ்கே அணி 9 ஆவது இடம் பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. அதே வேளையில், இந்த முறை சிஎஸ்கே போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்றும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

திருமண அழைப்பிதழில் தோனி

சிறந்த கேப்டனாக விளங்கி வரும் தோனிக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே போல, தோனிக்காக ரசிகர்கள் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதையும் நாம் கவனித்திருப்போம். இந்த நிலையில், தோனியின் ரசிகர் ஒருவர் தனது திருமண பத்திரிக்கையில் தோனியின் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளது தொடர்பான விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமண பத்திரிக்கைகளில் தெய்வத்தின் புகைப்படங்கள் அல்லது மணமக்கள் புகைப்படம் இடம்பெறும். ஆனால் வைரலாகி வரும் திருமண பத்திரிக்கையில், தோனியின் புகைப்படத்தை மணமக்கள் இடம்பெற வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read | பாட்டிலை மிஸ் பண்ணிய இஷான் கிஷன்.. அடுத்த கணமே ஜாலியா ரோஹித் செஞ்ச விஷயம்.. வைரல் பின்னணி!!

CRICKET, MS DHONI, MS DHONI FANS, WEDDING INVITATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்