‘தல’ய இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு.. ஒரே ஒரு போட்டோ.. இணையத்தை தெறிக்க விட்ட ‘சிஎஸ்கே’ ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சியில் ஈடுபட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல்முறையாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

அதேபோல் முன்னணி வீரர்களின் பேட்டிங் குறித்தும் விமர்சனம் எழுந்தது. இதில் கேதர் ஜாதவ் மீது சிஎஸ்கே ரசிகர்கள் அதிகமான விமர்சனங்களை முன்வைத்தனர். அதனால் சென்னை அணியில் இருந்து கேதர் ஜாதவ் விடுவிக்கப்பட்டார். தற்போது அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. அதனால் சிஎஸ்கே வீரர்கள் இப்போதே பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தோனியுடன் சென்னை அணியின் இளம்வீரர்கள் ஜெகதீசன், சாய் கிஷோர், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் தோனி பயிற்சியில் ஈடுபடும் போட்டோ இணையத்தில் வெளியாகி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்