'முன்னாள்' சிஎஸ்கே வீரரின் அணிக்கு...தலைமை பயிற்சியாளராக மாறும் 'சிஎஸ்கே' கோச்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வருகின்ற 2020 ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு ஏற்ற வகையில் தற்போதில் இருந்தே ஒவ்வொரு அணியும் தயாராகி வருகின்றன.அந்த வகையில் பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் இருக்கிறார்.வரும் ஆண்டில் அவரை மாற்றிவிட்டு புதிதாக ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க பஞ்சாப் அணி முடிவு செய்துள்ளது.

இதற்காக ஆண்டி பிளவர், டாரென் லெஹ்மன்,ஜார்ஜ் பெய்லி மற்றும் மைக்கேல் ஹஸ்ஸி ஆகிய நான்கு பேரையும் பஞ்சாப் அணி ஷார்ட்லிஸ்ட் செய்து வைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்