இவருக்கு இதே வேலையா போச்சு.. மைக்கேல் வாகன் போட்ட ட்வீட்.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை குறித்து ட்வீட் ஒன்றை போட்டு, ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் மைக்கேல் வாகன்.

Advertising
>
Advertising

டி 20 உலக கோப்பை போட்டி, கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி, கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையின் அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் டி 20 உலக கோப்பை போட்டி, ஆஸ்திரேலியாவில் வைத்து அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி ஆரம்பமாகிறது. மொத்தம் 45 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், நவமபர் 13 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறுகிறது.

இறுதி போட்டி

இதன் முதல் அரை இறுதி போட்டி, நவம்பர் மாதம் 9 ஆம் தேதியும், 10 ஆம் தேதியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, இறுதி போட்டி, நவம்பர் 13 ஆம் தேதியன்று, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குரூப்கள்

மேலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள், குரூப் 1 ல் இடம்பெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் 2 ல்  இடம்பெற்றுள்ளது.


கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பைத் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள், ஒரே பிரிவில் இடம்பெற்றிருந்த நிலையில், இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, சாதனை படைத்திருந்தது.

மைக்கேல் வாகன்

இதனிடையே, டி 20 உலக கோப்பை போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், அட்டவணை அறிவிக்கப்பட்டதுமே ட்வீட் ஒன்றைப் போட்டு, ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன். இந்தியா உள்ளிட்ட அணிகளைக் குறிப்பிட்டு, கிண்டல் அடிக்கும் வகையில், பல்வேறு ட்வீட்களை பகிர்ந்து, இந்திய ரசிகர்களிடம் மாட்டிக் கொள்வது, வாகனின் வழக்கம்.

இறுதி போட்டியில் யார்?

இந்நிலையில், தற்போதும் அதே போன்று ஒரு ட்வீட்டை போட்டுள்ளார் மைக்கேல் வாகன். 'நவம்பர் மாதம் நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை இறுதி போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக யார் விளையாட போகிறார்கள்?' என இப்போதே ட்விட்டரில் வாகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ரசிகர்கள் கேள்வி

இன்னும் ஒரு போட்டி கூட ஆரம்பிக்காத நிலையில், இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்ற தொனியில், மைக்கேல் வாகனின் ட்வீட், ரசிகர்கள் மத்தியில் அதிகம் கேள்விகளை எழுப்பியுள்ளது. சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற ஆஷஸ் தொடரை, இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இழந்தது.

 

கமெண்ட்

ஒரு போட்டியில் கூட ஆதிக்கம் செலுத்த இங்கிலாந்து அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அப்படி இருக்கும் போது, ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெறவுள்ள உலக கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதை இப்போதே எப்படி கூற முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.







அதே போல, மேலும் சிலர், பல விதமான கமெண்ட்டுகளையும் வாகனின்  பதிவின் கீழ் தெரிவித்து வருகின்றனர்.

 

இதன் காரணமாக, மைக்கேல் வாகன் செய்த ட்வீட் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது .

MICHAEL VAUGHAN, T 20 WORLD CUP 2022, TWEET, ASHES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்