"'இந்தியா' ஜெயிச்சதும்... மொத ஆளா இவர தான் தேடியிருப்பாங்க போல..." 'முன்னாள்' வீரரை 'ரவுண்டு' கட்டிய 'இந்திய' ரசிகர்கள்!!.. நடந்தது என்ன??...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணி, பதிலடி கொடுக்கும் வகையிலான ஆட்டத்தை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தியிருந்தது. கோலி, ரோஹித் ஷர்மா, முகமது ஷமி என நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ரஹானே தலைமையிலான இந்திய அணி முழு ஆதிக்கத்துடன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

முன்னதாக, இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்படுவதற்கு முன்னர், அனைத்து டெஸ்ட் போட்டிகளும் ஆஸ்திரேலிய அணி தான் வெற்றி பெறும் என ஒரு கருத்து நிலவி வந்தது. பல முன்னாள் வீரர்களும் இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் கடினமாக தான் இருக்க போகிறது என்றும், ஆஸ்திரேலிய அணியின் கை தான் ஓங்கும் என்றும் தெரிவித்திருந்தனர். 

 

இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், 'ஆஸ்திரேலியா அணி 4 - 0 என இந்த தொடரை வெல்லும்' என தனது டீவீட்டில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், வாகன் டீவீட்டை தூசு தட்டி ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். 











 

இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து, மைக்கேல் வாகன் ரஹானே மற்றும் இந்திய அணியை பாராட்டி ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்