ஓ...! 'டெஸ்ட் மேட்ச்ல அவர் விளையாடலையா...' 'அப்போ ஆஸ்திரேலியா கன்ஃபார்மா ஜெயிச்சிடும்...' - மைக்கேல் வாகன் ட்வீட்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கடைசி 2 நாட்களில் விளையாடமாட்டார் என அறிவித்ததும், ஆஸ்திரேலிய அணி மிக எளிதாக வென்றுவிடும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் பதிவேற்றிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

நவம்பர் மாதம் வரும் 27-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டி தொடரிலும் டிசம்பர் 17-ம் தேதி டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. இதன்காரணமாக இந்திய அணி வரும் வாரத்தில் ஆஸ்திரேலியா செல்கின்றனர். அதன்பின் வீரர்கள் இரு வார குவாரன்டைனை முடித்துக்கொண்டு, வரும் 27-ம் தேதி ஒருநாள் போட்டித் தொடரிலும் அடுத்ததாக டி20 தொடரிலும் டிசம்பர் 17-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டித் தொடரிலும் இந்திய அணியினர் விளையாடவுள்ளனர். முதல் டெஸ்ட் தொடர் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முதலில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள கேப்டன் விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி இந்தியா திரும்பவுள்ளார். இதனை பிசிசிஐ-யும் கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது

இதனை உதாரணம் காட்டிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், 'விராட் கோலி சரியான முடிவை தான் எடுத்துள்ளார். இந்த முடிவு ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும், விராட் கோலி இல்லாத டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா மிகவும் எளிதாக வெற்றி கொண்டு விடும்' என தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்