“இதனால் உங்களுக்கு Followers வந்தா சரி”.. ஆகாஷ் சோப்ராவுக்கு பொல்லார்டு பதிலடி.. கடைசியில் ட்விஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் விமர்சனங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற சாம்பியன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது ஆச்சரியமாக இருந்தது.

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதனால் அந்த அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா, இளம் வீரர் இஷான் கிஷன், முன்னணி ஆல்ரவுண்டர் பொல்லார்டு உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் வைத்தனர்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, பொல்லார்டை கடுமையான விமர்சனம் செய்தார். அதில், ‘பொல்லார்ட்டை கடைசியாக மும்பையில் பார்த்தோம் என்று நினைக்கிறேன். அவரை மும்பை நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவித்தால் 6 கோடிகளை மிச்சப்படுத்தலாம். அதேபோல் முருகன் அஸ்வினையும் விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் ஜெயதேவ் உனட்கட் பற்றி உறுதியாக தெரியாது. ஆனால் கண்டிப்பாக டைமல் மில்ஸ்க்கு டாட்டா காட்ட போகிறார்கள்’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொல்லார்டு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இதனால் உங்களுக்கு ரசிகர் கூட்டம் மற்றும் ஃபாலோயர்ஸ் அதிகரித்திருப்பார்கள் என்று நம்புகிறேன், இதை தொடருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து உடனடியாக இந்த டுவீட்டை பொல்லார்டு டெலிட் செய்துவிட்டார். இந்த நிலையில், அந்த டுவீட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

MUMBAI-INDIANS, IPL, POLLARD, AAKASH CHOPRA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்