விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. உடல்நிலை & அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர் அளித்த தகவல்! முழு விவரம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரிஷப் பண்ட் உடல்நிலை & அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஆஷிஷ் யாக்னிக் பேட்டி அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Kangana Ranaut : “திரௌபதிக்காக கிருஷ்ணர் எழுந்தருளியது போல” - துனிஷா சர்மா மரணம் தொடர்பில் பிரதமரிடம் கங்கனா ரனாவத் கோரிக்கை!

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,

விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு  சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் மேக்ஸ் மருத்துவமனை சார்பில் தலைமை மருத்துவர் ஆஷிஷ் யாக்னிக் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அந்த பேட்டியில் முதல் கட்ட சிகிச்சையில் கிரிக்கெட் வீரர் ரிஷப்புக்கு கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் நிலையாக இருப்பதாகவும் கூறினார்.

அவர் கூறியது, "ரிஷப் மருத்துவர்கள் மதிப்பீட்டில் உள்ளார் மற்றும் மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. சில சோதனைகளுக்குப் பிறகுதான் இன்னும் சொல்ல முடியும். தற்போது அவர் நிலையாக இருக்கிறார், கவலைப்பட ஒன்றுமில்லை. டாக்டர்கள் குழு அவருடன் பேசி, காயங்கள் குறித்து அவர் எங்களிடம் கூறுவதன் அடிப்படையில், அவர் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறார். முதல் பார்வையில், கடுமையான காயங்கள் எதுவும் இல்லை. எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்,” என்று யாக்னிக் கூறினார், மருத்துவமனை விரைவில் ஒரு உடல்நிலை குறித்து புல்லட்டின் வெளியிடும் என்றும் கூறினார்.

ரிஷப் பண்ட் உடல் நிலை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் பங்களாதேஷுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய டெஸ்ட் அணியில் பந்த் இடம்பெற்றிருந்தார். அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான போட்டிகளுக்கான இருபது20 மற்றும் ஒருநாள் அணியில் அவர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

Also Read | RISHABH PANT: 6 இடங்களில் காயம்.. முழங்காலில் தசைநார் கிழிவு.. ரிஷப் பண்ட்டின் உடல்நிலை குறித்து BCCI அறிக்கை..

CRICKET, HOSPITAL, RISHABH PANT, DOCTOR, RISHABH PANT HEALTH CONDITION, BCCI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்