இந்திய வீரர்களை வெறுப்பேற்றிய ஆஸ்திரேலிய வீரர்.. அஸ்வின் செஞ்ச செம சம்பவம்.. ரோஹித் வேற உள்ள வந்துட்டாரு.. பரபர வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் சூழலில், இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | பட்டமளிப்பு மேடையில் ரஞ்சிதமே ஸ்டைலில் Flying Kiss கொடுத்த மாணவர்.. ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு!!

முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியை ஆட்டம் காண வைத்திருந்த இந்திய கிரிக்கெட் அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரையும் தக்க வைத்துக் கொண்டிருந்தது. அப்படி இருக்கையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இந்தூர் மைதானத்தில் வைத்து நடைபெற்று இருந்தது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.ஆஸ்திரேலிய அணியின் அசத்தலான சுழற்பந்து வீச்சால் இந்திய அணி பெரிய அளவில் ரன்கள் குவிக்கவும் முடியவில்லை. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலியா அணி 197 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கி இருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்சிலும் இந்தியாவால் சிறப்பாக ரன் குவிக்க முடியவில்லை. இதனால் இந்திய அணி 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட சூழலில் அந்த அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து சிறப்பாக ஆடி 19-வது ஓவரில் இலக்கை எட்டி இருந்தது. மேலும் இந்த வெற்றியின் காரணமாக ஆஸ்திரேலியா அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றமும் கண்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள சூழலில் அடுத்த போட்டியில் நிச்சயம் வென்றால் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுப்பேற்றிய மார்னஸ்

இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது அஸ்வினை கடுப்பேற்றும் வகையில் நடந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர் தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது ஒன்பதாவது ஓவரில் மார்னஸ் லபுசேன், அஸ்வின் பந்தை எதிர்கொண்டபடி இருந்தார். அப்போது முதல் நான்கு பந்துகளை வழக்கமான தூரத்தில் இருந்து ஓடி வீசிய அஸ்வின், கடைசி இரண்டு பந்துகளில் இன்னும் ஸ்டம்ப்பிறகு அருகே வந்து பந்து வீச முயன்றதாக தெரிகிறது. அஸ்வின் பந்து வீச வந்த போது அதை எதிர்கொள்ளாமல் மார்னஸ் விலகி சென்றார். இதனைத் தொடர்ந்து, சற்று நேரம் எடுத்துக் கொண்ட மார்னஸ், மீண்டும் பந்தை எதிர்கொள்ள கிரீஸிற்கு வந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

அதிருப்தி அடைந்த அஸ்வின்?

அப்போது, அஸ்வின் பந்து வீச வந்ததும் மீண்டும் மார்னஸ் விலகிச் சென்று நேரத்தை கடக்கும் வகையில் நடந்து கொண்டது இந்திய வீரர்களையும், போட்டியை பார்த்த ரசிகர்களையும் கடுப்பேற்றும் வகையில் அமைந்திருந்தது.  ரவிச்சந்திரன் அஸ்வின் சிரித்தபடி இருந்தாலும் சற்று அதிருப்தி அடைந்ததாகவும் தெரிகிறது. உடனடியாக போட்டி நடுவர் ஜோயல் வில்சன் நேராக மார்னஸிடமும் இது பற்றி விசாரித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூட இது பற்றி மார்னஸிடம் கேட்டதாக தெரிகிறது. அஸ்வின் வேகமாக பந்து வீச வந்த சூழலில் அதை எதிர்கொள்ளாமல் மார்னஸ் தயங்கியது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | பதற்றத்தில் பயந்து நின்ன மான்.. ஒண்ணுமே பண்ணாம Casual -ஆ நடந்து போன புலி... IFS ஆபீசர் பகிர்ந்த வீடியோ!!

CRICKET, MARNUS LABUSCHAGNE, ASHWIN, IND VS AUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்