"ஒரு வழியா அந்த 'கனவு' நிறைவேறிடுச்சு.." வேற 'லெவல்' உற்சாகத்தில் திளைத்த 'சிஎஸ்கே' வீரர்... வைரலாகும் 'இன்ஸ்டா' பதிவு!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் 14 ஆவது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானாதால், தொடர் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள போட்டிகளை வேறு நாடுகளில் வைத்து நடத்தவும், பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.விரைவில், இதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் சிறப்பாக செயல்பட்டிருந்தது. கடந்த சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறிய சிஎஸ்கே, கடுமையான விமர்சனங்களையும் சந்தித்திருந்தது.

ஆனால், அதிலிருந்து வேற லெவலில் மீண்டு வந்துள்ள சிஎஸ்கே, இந்த சீசனில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. இதனிடையே, சென்னை அணிக்காக ஆடி வரும் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நெகிடி (Lungi Ngidi), தனது இன்ஸ்டாவில் செய்த பதிவு ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

முதல் முறையாக வீடு ஒன்றைக் கட்டியுள்ள லுங்கி நெகிடி, அதன் வாசலில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, 'இறுதியாக, எனது சொந்த இடம் என நான் அழைப்பதற்காக ஒரு இடம் கிடைத்து விட்டது. முதல் முறையாக இடம் வாங்கியுள்ளேன்' என மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.



ரசிகர்கள் பலரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், சிஎஸ்கே அணி வீரர்களும், அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளை செய்துள்ளனர்.

 

இது தொடர்பான பதிவுகள் பற்றி, சிஎஸ்கே அணியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்து லுங்கி நெகிடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியிலும் இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்