இந்தியாவிற்கு அடுத்த 'பதக்கம்' கன்ஃபார்ம்...! 'அரையிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை...' யார் இவர்...? - குவியும் பாராட்டுக்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் லவ்லலினா.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக்கில் போட்டியின் 7-வது நாளான  இன்று (30-07-2021) மகளிர் குத்துச்சண்டையின் 64-69 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பாக லவ்லலினா போட்டியிட்டு காலிறுதிப் போட்டியில் கலந்து கொண்டார்.

இந்தியாவின் லவ்லினா, சீன தைபேயின் சின்-சென் நியென்னை எதிர்கொண்டு 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் லவ்லலினா அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.

இந்த செய்தி இன்று காலை வெளிவந்ததையடுத்து, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்