'மொத்தக் கனவுக்கும் ஆப்பு வைத்த சிஎஸ்கே!'.. 'தொடரில் இருந்து' வெளியேறிய 'இன்னொரு' ஐபிஎல் அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 53வது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கேவின் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டூ பிளசிஸ் ஆகியோரின் ஆட்டம் அணியை வெற்றிபெற செய்தது.

ஆனால் சென்னை அணியின் இந்த வெற்றியால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் சுற்று கனவு தகர்ந்துள்ளது. கடந்த இரு போட்டிகளுக்கு முன்பே சிஎஸ்கே 12 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய நிலையில், தொடர்ந்து 3 வெற்றிகளின் மூலம் சென்னை அணி தொடரிலிருந்து கவுரமாக வெளியேறியுள்ளது.

ஆனால் இந்த போட்டியின் தோல்வி மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தகர்ந்து அந்த அணியும் தொடரிலிருந்து வெளியேறுகிறது.  முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற அந்த அணி, பின்பு 5 போட்டிகளில் வென்றது.

ஆனால், நேற்றைய போட்டியின் தோல்வி அந்த அணியையும் 12 புள்ளிகளுடன் தொடரிலிருந்து வெளியேற வைத்தது. அணியின் தீபக் ஹுடா 32 பந்துகளில் 60 ரன்களை குவித்தும், அந்த முயற்சி வீணானது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்