VIDEO: ‘ஐயோ.. எவ்ளோ ஆக்ரோஷம்’!.. அவுட் ஆனதும் கோலியோட கோபத்தை பாருங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அவுட்டானதும் கேப்டன் விராட் கோலி செஞ்ச செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 191 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாகூர் 57 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்தது. இதில் அந்த அணியின் ஒல்லி போப் 81 ரன்களும், கிறிஸ் வோகஸ் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்களை குவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சதமும் (127 ரன்கள்), புஜாரா (60 ரன்கள்), ரிஷப் பந்த் (50 ரன்கள்) மற்றும் ஷர்துல் தாகூர் (60 ரன்கள்) ஆகியோர் அரைசதமும் அடித்து அசத்தினர். இதனை அடுத்து இங்கிலாந்து அணி 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டியில் அவுட்டானதும் கேப்டன் விராட் கோலி, டிரெஸ்ஸிங் ரூமுக்கு செல்லும்போது ஆக்ரோஷமாக சுவற்றில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது மொயின் அலி ஓவரில் எதிர்பாராதவிதமாக விராட் கோலி அவுட்டானார்.

முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததால், இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6 ரன்னில் அதனை தவறவிட்டதால் விராட் கோலி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்