"இதுக்கே நீங்க 'இப்டி' பண்ணலாமா??..." 'கோலி'யை கலாய்த்த 'நெட்டிசன்'கள்... 'காரணம்' இது தான்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை எளிதில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் குறிப்பாக டிவில்லியர்ஸ் பவுண்டரி மழைகளை பொழிந்தார். அவருடன் கைகோர்த்து ஆடிக் கொண்டிருந்த விராட் கோலி, மிகவும் நிதானமாக ஆடி டிவில்லியர்ஸ் அடிக்க வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்.



 

அப்போது தனது முதல் பவுண்டரியை அடிக்கவே கோலி 25 பந்துகள் எடுத்துக் கொண்ட நிலையில், பவுண்டரி அடித்து விட்டு விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக ஈடுபட்டிருந்தார். இதனை ரசிகர்கள் அதிகம் கிண்டல் செய்து வருகின்றனர். மறுபக்கம் சிக்ஸர் மழை பொழிந்த டிவில்லியர்ஸ் மிக அமைதியாக நிற்க ஒரு பவுண்டரி அடித்ததற்கு இப்படியா ஆக்ரோஷம் கொள்வது என பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது அதிகம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.



 

டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்