"அவரு கூட ஒரு செல்ஃபி எடுத்தே ஆகணும்".. ஒரே நாளில் 23,000 செலவு செஞ்சு.. கோலி'ய மிரள வெச்ச ரசிகர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர், தற்போது  இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இதில், டி 20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி இருந்தது.

இதற்கடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோத உள்ளது. இந்நிலையில், கோலி ரசிகர் ஒருவர் செய்த விஷயம் தொடர்பான செய்தி, இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

பொதுவாக, ஒரு பிரபலத்தின் ரசிகராக இருக்கும் எந்த ஒரு நபராக இருந்தாலும், தங்களின் ஐகானை வாழ்வில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். அப்படி தான், கோலி ரசிகரான இளைஞர் ராகுல் ராயும் வியக்க வைக்கும் முடிவு ஒன்றை கோலியை பார்ப்பதற்காக எடுத்துள்ளார்.

கடந்த 11 வருடங்களாக கோலியின் தீவிர ரசிகராக இருந்து வருபவர் ராகுல் ராய். இவர் குவஹாத்தியை சேர்ந்தவர் ஆவார். முன்னதாக, இரண்டாவது டி 20 போட்டிக்காக இந்திய அணியினர்குவஹாத்தி வந்திருந்தனர். அப்போது வீரர்களைக் காண விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அதில், கோலியை சந்தித்து எப்படியாவது பேசி விட வேண்டுமென ராகுலும் காத்துக் கொண்டிருந்துள்ளார். ஆனால் கூட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, கோலியை ராகுலால் சந்திக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, பயிற்சியின் போதும் கோலியை பார்க்க ராகுல் சென்றுள்ளார். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அங்கேயும் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. இறுதியில், மிகவும அதிரடியான முடிவு ஒன்றையும் கோலியை சந்திப்பதற்காக ராகுல் ராய் எடுத்துள்ளார்.

இந்திய வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் ரூமை புக் செய்துள்ளார் ராகுல். மிகவும் சொகுசு ஹோட்டலான அங்கே ஒரு நாள் வாடகை 23,000 ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதை எல்லாம் தாண்டி, அங்கே ஒரு நாள் தங்கவும் ராகுல் ராய் முடிவு செய்து களமிறங்கி உள்ளார். இதன் பயனாக, அந்த ஹோட்டலில் காலை உணவு சாப்பிடும் போது கோலியை சந்தித்துள்ளார் ராகுல் ராய்.

இதன் பின்னர், அவரிடம் பேசிய ராகுல் ராய், செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டார். கோலி குறித்த தனது இன்ஸ்டா பேஜ் குறித்து அவரிடம் பேசிய ராகுல், அதன் ஃபோட்டோ ஃப்ரேமில் கோலியின் ஆட்டோகிராபையும் அவர் பெற்றுள்ளார். 23,000 ரூபாய் செலவு செய்து கோலியுடன் அவரது ரசிகர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIRATKOHLI, FANBOY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்