‘திடீரென விலகிய கே.எல்.ராகுல்’!.. அப்போ அவருக்கு பதிலாக விளையாடப்போறது ‘இவர்’ தானா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயம் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதனை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இதன் முதல் போட்டி வரும் 25-ம் தேதி கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் கேப்டன் விராட் கோலிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மட்டும் ரஹானே கேப்டனாக வழி நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

KLRAHUL, SURYAKUMARYADAV, INDVNZ, TEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்