‘புதிய கிரிக்கெட் தொடர்’!.. லிஸ்டில் இருக்கும் தினேஷ் கார்த்திக் பெயர்.. ஆனா இந்த முறை விளையாட இல்லை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள புதிய கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்ட் இணைந்து ‘தி ஹண்ரட்’ (The Hundred) என்ற புதிய கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இன்னிங்ஸில் மொத்தமாக 100 பந்துகள் மட்டுமே வீசப்படுகிறது. இந்த தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்கவுள்ளன என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மொத்தம் 68 போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஆடவர் மட்டுமல்லாமல் மகளிர் பங்கேற்கும் தி ஹண்ரட் தொடரும் நடைபெறவுள்ளது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத், ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா உட்பட 5 பேர் இந்த தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடரில் வர்ணனையாளர்களாக பங்கேற உள்ளவர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக இடம்பெற்றுள்ளார். மேலும் கெவின் பீட்டர்சன், பிளின்டாஃப், ஸ்டூவர்ட் பிராட், டேரன் சமி, குமார் சங்ககாரா, வாசிம் அக்ரம் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார். தற்போது கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்துவைக்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக பங்கேற்பார் என தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்