இதெல்லாம் ரொம்ப ‘தப்பு’.. இவ்வளவு ‘மோசமாவா’ நடந்துக்குறது.. இளம்வீரருக்கு எதிராக ‘கொதித்த’ ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே வீரர் பிராவோவின் விக்கெட்டை எடுத்ததும் நக்கல் அடிக்கும் விதமாக கலீல் அகமது சிரித்த சம்பவத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று (13.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 167 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், அம்பட்டி ராயுடு 41 ரன்களும் அடித்தனர்.

இதனை அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியை பொருத்தவரை கேன் வில்லியம்சன் 57 ரன்கள் அடித்தார்.

இந்தநிலையில் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, பிராவோவின் விக்கெட்டை எடுத்ததும் நக்கல் அடிக்கும் விதமாக சிரித்த சம்பவம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்போட்டியின் கடைசி ஓவரை கலீல் அகமது வீசினார். அதற்கு முந்தைய ஓவரின் கடைசி பந்தில் தோனி அவுட்டானதால், பிராவோ களமிறங்கினார். அப்போது கலீல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த பிராவோ போல்ட்டாகி அவுட்டானார். இந்த ஐபிஎல் சீசனில் பிராவோ சந்திக்கும் முதல் பந்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பிராவோ அவுட்டானதும் நக்கல் அடிக்கும் விதமாக கலீல் அகமது தனது வாயை மூடி சிரித்தார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, கலீல் மோசமான அணுகுமுறை கொண்ட பந்துவீச்சாளர், மைதானத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராகுல் திவாட்டியா உடன் கலீல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கடும் விமர்சனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்